உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த தமிழ் சிறுமி - குவியும் பாராட்டுகள் (காணொளி) அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை அல் -மினன் வீதி ஸர்ஜுன் அக...
உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த தமிழ் சிறுமி - குவியும் பாராட்டுகள் (காணொளி)
அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை அல் -மினன் வீதி ஸர்ஜுன் அக்மல் பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் புதல்வியான மின்ஹத் லமி, தனது இரண்டரை வயதில் 120 உலக நாடுகளின் தலைநகரங்களை இரண்டு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி உலக சாதனைப் புத்தகத்தில் (international book of world record) தனது பெயரை பதிவு செய்தமை பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
உலக சாதனை புத்தக நிறுவனமானது இச்சிறுமியின் திறமையையும், அதீத நினைவாற்றலையும் பரிசீலனை செய்து உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்து சாதனைச் சிறுமியாக தமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய சிறுமியின் அதீத நினைவாற்றலை காணொளியில் காண்க,,